Friday, October 14, 2005

பதிவு07: CRY பாலூன் பார்க்கும் குழந்தைகள்

CRY சேவை அமைப்புக்காக நடத்தப்பட்ட Walk For Child Rights 2005 நிகழ்ச்சியில் பாலூன் மாமா

Date: Saturday, Oct 1st, 2005, Time: 10:30 AM Venue: North Cary Park, Cary, NC. We will be collecting tips for CRY

CRY க்காக அதன் தன்னார்வத் தொண்டர்களும் நடைப்பயணத்தில் கலந்து கொள்ளவந்த ஆர்வலர்களும் North Cary Park ல் அக்டோபர் 01,2005 சனிக்கிழமை காலை 10:00 மணியில் இருந்து வரத்தொடங்கிவிட்டனர். நான் எனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்று இருந்தேன். நிகழ்ச்சியின் அமைப்பாளர் சரவணன் எனக்காக ஒரு பூத் அமைத்திருந்தார்.



இது போல் பல பூத்கள் அமைக்கப்பட்டு இருந்தன. மருதாணி, Clown , Majic Show என்று பல பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

என்னுடைய பூத்திலேயே "கைரேகை ஜோசியம்" சொல்லும் எனது நண்பர் ஒருவர் இருந்தார். நானும் அவரும் அந்த பூத்தைப் பகிர்ந்து கொண்டோம்.

ஒவ்வொரு பூத்திலும் ஒரு கட்டணம் வசூலிக்கப் பட்டது. மொத்தமாக பணம் செலுத்தி டோக்கன் வாங்கிக் கொண்டவர்கள் அந்த அந்த பூத்திற்குத் தகுந்தவாறு டோக்கன் கொடுத்து சேவையைப் பெற்றனர்.

வந்திருந்த அனைத்துக் கலைஞர்களும் தங்களின் நேரத்தை CRYக்காக இலவசமா வழங்கினர். எங்களால் சேமிக்கப்பட்ட அனைத்துப் பணமும் CRY அமைப்பிற்கு வழங்கப்பட்டது.

நடைப்பயணத்தில் கலந்து கொள்பவர்கள் $10 கொடுத்து அவர்களின் பெயரைப் பதிவு செய்து கொண்டு இருந்தார்கள். பதிவு செய்த ஒவ்வொருவருக்கும் ஒரு T-Shirt கொடுக்கப்பட்டது.

30 ல் இருந்து 40 குழந்தைகள் வரை வந்து இருந்தனர். 11:30 மணிவாக்கில் CRY நடைப்பயணம் ஆரம்பித்தது. பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுடன் நடைப்பயணத்தை ஆரம்பித்தனர். சுமார் அரைமணி நேரம் கழித்து ஒவ்வொருவராக நடைப்பயணத்தை முடித்துவிட்டு வரத் தொடங்கினர்.



நடைப்பயணதில் கலந்து கொண்ட குழந்தைகள் போக பூங்காவிற்கு சும்மா வந்த மற்ற குழந்தைகளும் பலூன் மாமவைச் சுற்றிக் கொண்டனர். ஆகா பலூன் மாமா வசமா மாட்டிகிட்டார்.

அன்று நான் வண்ணத்துப்பூச்சி தொப்பி , பூ, போர்க் கத்தி (sword) ,கிளி, அன்னப் பறவை மற்றும் பலவிதமான தொப்பிகளைச் செய்து கொடுத்தேன். வந்தவர்கள் மிகவும் தாராளமாக நிதி வழங்கினர்.
சுமார் இரண்டரை மணி நேரம் குழந்தைகளுடன் குழந்தைகளாக செலவழித்தேன்.

பிங்க் பூ தான் வேண்டும் என்று கேட்டு வாங்கிச் செல்லும் இந்தக் குழந்தையின் முகத்தில் எத்தனை மகிழ்ச்சி !!








இந்த நிகழ்ச்சியின் போது எனது மகனையும் மகளையும் என்னால் கவனிக்க முடியவில்லை. மனைவிதான் பார்த்துகொண்டு இருந்தார். வீட்டிற்கு வந்தவுடன் எனது மகன், நான் பூங்காவில் மற்ர குழந்தைகளுக்கு செய்து கொடுத்த அனைத்துப் பலூன்களும் வேண்டும் என்று கேட்டான். பூங்காவில் என்னைத் தொந்தரவு செய்யாமல் இருந்ததற்காக நான் அவனுக்கு சில பலூன் தொப்பிகளைச் செய்து கொடுத்தேன்.







8 comments:

Anonymous said...

hey nice job man .good to know that some indian is performing such a show

அன்பு said...

பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி, பாராட்டுக்கள்.

Ramya Nageswaran said...

நல்ல வேலை செஞ்சுருக்கீங்க.. வாழ்த்துக்கள்

பரஞ்சோதி said...

உங்க சேவையை வியந்து பாராட்டுகிறேன்.

தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்த்துகள்.

Unknown said...

அனானி, ரம்யா,பரஞ்சோதி வாழ்த்துகளுக்கு நன்றி.

சிவா said...

உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்.

Anonymous said...

யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத, நெஞ்சையுருக்கும் உண்மைச் சம்பவமொன்றுதான் இது.
விடுதலைப்புலிகளின் கொள்கைகள் பற்றி விமர்சனங்களும் சர்ச்சைகளும் ஆச்சரியங்களும் உண்டு. எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற கொள்கையை இயக்கம் தொடங்கப்பட்ட காலம் முதலே மிக இறுக்கமாகக் கடைப்பிடித்து வருபவர்கள் அவர்கள். ஒவ்வொரு போராளியின் கழுத்திலும் சயனைட் வில்லைகள் இருக்கும். இச்சம்பவமும் எதிரியிடம் பிடிபடும் சந்தர்ப்பமொன்றின்போது நடந்ததுதான்.
1997 ஆனி மாதம் மட்டக்களப்பிலிருந்து வன்னி நோக்கி இருபடகுகளில் சில போராளிகள் வருகிறார்கள். இரவுப்பயணம். கடும் சண்டைக்குரிய ஆயத்தங்களேதுமற்ற சாதாரண பயணம். எப்படியோ திருகோணமலையை நெருங்கியபோது எதிரியின் விசைப்படகின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். படகு சேதமடைகிறது. கடலிற்குதித்து நீந்தத் தொடங்குகின்றனர். எல்லோரும் பிரிந்துவிட்டனர். அதில் ஒருவன் தான் பாலன். கடற்கரும்புலி அணியைச் சேர்ந்தவன் தான் பாலன்.
இரவிரவாக நீண்டதூரம் நீந்தி "இறக்க கண்டி" எனுமிடத்திற் கரைசேர்கிறான் பாலன். விடிந்துவிட்டது. கரையில் சோர்வினால் மயங்கிப்போன நிலையில் சிலரால் காட்டிக்கொடுக்கப்பட்டு இராணுவத்தாற் கைதாகிறான்.
இராணுவ முகாமில் கண்விழித்த பாலனுக்கு அப்போதுதான் தாம் கைதுசெய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கழுத்தில் குப்பியில்லை.
இனி சித்திரவதை செய்யப்படப்போவது உறுதி. அதில் இரகசியங்கள் காப்பாற்றப்பட வேண்டுமே. அதுவும் பாலன் கடற்கரும்புலி அணியாதலால் நிறைய விசயங்கள் தெரிந்திருந்தான். தன்னை மாய்த்துக்கொள்ள ஏதும் கிடைக்குமா என்று முயன்றான். கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் குப்புறக் கிடத்தப்பட்டிருந்தான். இன்னும் சிறிது நேரத்தில் ‘விசாரணை’ தொடங்கப் போகிறது. எதுவும் செய்ய முடியாத நிலை. அந்த நேரத்தில் தான் அசாதாரணமான முடிவையெடுத்தான். தன் நாக்கை வெளித்தள்ளி பற்களால் இறுக கடித்தபடி தலையை உயர்த்தி தன் நாடியை ஓங்கித் தரையில் அடித்தான். நாக்குத் துண்டானது. சித்திரவதையின் போது தன்னால் உண்மைகள் வெளிவரக்கூடாதென்பதற்காகத் தன் நாக்கைத் தானே துண்டித்தான்.
மீண்டும் மயங்கிய அவன் கண்விழித்தபோது இராணுவ மருத்துவமனையிற் கிடத்தப்பட்டிருந்தான். தனக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை அறிந்த பாலன் அடுத்த கட்டத்தை யோசித்தான். எப்படியும் தன்னை மாய்த்துக்கொள்ள வேண்டுமென்பதிலேயே குறியாயிருந்தான். ஏனெனில் தன்னிடமிருந்து போகப்போகும் விவரங்கள் ஏற்படுத்தப்போகும் விளைவுகள் பயங்கரமானவையென்பதை நன்கு அறிந்திருந்தான். முயற்சித்து முயற்சித்து இறுதியில் அந்த முடிவையெடுத்தான். நினைத்தும் பார்க்க முடியாதது அது. தன் தலையை அந்த இரும்புக்கட்டிலில் மோதி மோதி மண்டையுடைந்து இறந்துபோனான்.
ஒரு மோதலுக்குப்பின்னும் சாகும்வரை தொடர்ந்து தன் தலையைக் கட்டிலின்மேல் மோதுமளவுக்கு அவனுக்குத் துணிவும் வைராக்கியமும் இருந்தது, ஒரு துளி நீர் கூட வாயில் வைக்காமல் 12 நாட்கள் இருந்து அணுவணுவாகச் தன்னைத்தானே சாகடித்த திலீபனைப் போல. (பாலனது இயற்பெயர்கூட திலீபன் தான்.)
கரும்புலிகள் நாளான இன்று நூற்றுக்கணக்கான சரித்தரங்களில் ஒன்றான கரும்புலி கப்டன் பாலனையும் அவனது இந்நெஞ்சையுருக்கும் சம்பவத்தையும் பகிர்ந்து கொள்கிறேன். அதேநேரம் இதுவரை வீரச்சாவடைந்த 265 கரும்புலிகளுக்கும் வெளிவராமல் உறங்கும் ஏனையவர்க்கும் இதய அஞ்சலிகள்.
பி.இரயாகரன்

Adelante4 said...

Great photos. Indian life looks a lot of fun!

Jason from Dog Beds